Custom Search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

பன்றிக் காய்ச்சல்… புரிதலும் அணுகுமுறையும்!

பன்றிக் காய்ச்சல், உலக சுகாதார மையத்தால் கண்டங்களைத் தாண்டிப் பரவும் கொள்ளை நோயாக (epidemic) ஜூன் 11-ம் தேதி அறிவிக்கப்பட்டது.


ஆயினும், ஆகஸ்ட் 3-ம் தேதி புனேயில் பன்றிக் காய்ச்சலால் விளைந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்ட பின்புதான் இந்தியா பெரும் பரபரப்போடு விழித்துக் கொண்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த இருபத்தாறுக்கும் மேற்பட்ட பன்றிக் காய்ச்சல் மரணங்கள் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன.


ஓரிரு ஆண்டுகளில் உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு மக்களைப் பாதிக்கச் சாத்தியமுள்ள கொள்ளை நோயாக பன்றிக் காய்ச்சல் உருவெடுத்துள்ளது என உலக சுகாதார மைய நிபுணர்கள் கருதுகின்றனர்.


கடந்த நூறு ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சல் இத்தகைய கொள்ளை நோயாகப் பரிமாணம் கொள்வது இது நான்காவது முறையாகும். ஆயினும், இந்தத் தடவை பன்றிக் காய்ச்சலின் வீரியம், இதுவரை “மிதமானதாக’ இருக்கிறது என ஒப்புக்கொள்ளும் நிபுணர்கள், அதன் வீரியமும் வேகமும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கின்றனர்.


அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் பெரும் சவாலாகத் திகழும்போது, இந்தியா போன்ற ஒருங்கிணைந்த வளர்ச்சியடையாத நாடுகளுக்கு பன்றிக் காய்ச்சல் இன்னும் பெரிய சவாலாக விளங்கும் என்பதில் ஐயமேதும் இல்லை.


இக்கொள்ளை நோய் குறித்த ஆழமான புரிதலும், அரசும் குடிமக்களும் சேர்ந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த செயல்பாடுகளுமே இதன் தாக்கத்தை மட்டுப்படுத்தும் என்பதை நாம் அடிப்படையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.


நோயின் அறிகுறிகள்:


1918-ம் ஆண்டு விஷக்காய்ச்சல் முதன்முதலாக கொள்ளை நோயாக உருவெடுத்தபோது, அதற்குக் காரணமான H1N1 இன்ஃபுளுயன்சா வைரஸôல் பன்றிகளும் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.


பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு மற்ற விஷக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவே இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி, உடல்வலி மற்றும் காய்ச்சல் ஆகிய நோய்க்குறிகள் காணப்படும். இவ்வகை பன்றிக் காய்ச்சல், ‘மூச்சுத் திணறலோடு கூடிய விஷக்காய்ச்சல்’ எனப் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், முந்தைய வகைகளிலிருந்து சில அடிப்படையான அம்சங்களில் மாறுபடுகிறது. காய்ச்சல் ஒரு நோய்க்குறியாக பலரிடம் காணப்படுவதில்லை.


அதேவேளை, பேதி ஒரு முக்கிய நோய்க் குறியாகப் பலரிடம் காணப்பட்டுள்ளது. இருந்த போதிலும், இந்நோயின் தாக்கத்திற்கு உள்ளானவர்களில் பெரும்பாலோர், சாதாரண விஷக்காய்ச்சலுக்கு உள்ளானவர்களைப் போன்றே இரண்டு அல்லது மூன்று நாள்களில் குணமடைந்து விடுகின்றனர். ஆனால், குறிப்பிட்ட ஒருசிலர், சில மணித்துளிகளிலிருந்து சில நாள்களுக்குள் நோயின் தீவிரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.


நோய் தீவிரமடையும்போது, சுவாச உறுப்புகளுக்குள் நீர்கோர்த்துக் கொள்வதால், மூச்சுத்திணறல் உண்டாவதைத் தொடர்ந்து சிறுநீரகம், இதயம், மூளை முதலிய முக்கிய அவயங்கள் செயலிழப்பதால் மரணம் உண்டாகிறது. இத்தகைய தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடியவர் இரண்டு வயதிற்குட்பட்ட சிறார்களாகவோ அல்லது அறுபது வயதைக் கடந்த முதியவர்களாகவோ இருக்கின்றனர்.


இது மட்டுமன்றி ஆஸ்த்மா முதலான சுவாச மண்டல நோய்கள், ஹெச்ஐவி மற்றும் நீரிழிவு நோய் முதலான நோய் எதிர்ப்பைக் குறைக்கும் நோய்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களும், உடல் பருமன் கொண்டவர்களும், கருவுற்றிருக்கும் பெண்களும் பன்றிக் காய்ச்சலின் தீவிரத் தாக்குதலுக்கு உள்ளாக சாத்தியமுள்ளவர்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


நோய் தணிப்பு மற்றும் தவிர்ப்பு


பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோயைப் பரவாமல் தடுக்கவும் அதன் தாக்கத்தைத் தணிக்கவும் நோய் குறித்த நடைமுறை ரீதியிலான புரிதலும், ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம்.


அமெரிக்க அனுபவத்தையும் உலக சுகாதார மைய அறிக்கைகளையும் அலசிப் பார்க்கும்போது பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் ஒருசில நாள்களிலோ அல்லது ஓரிரு வாரங்களிலோ தீர்ந்துவிடக்கூடிய பிரச்னையில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்நோய் தட்பவெப்ப சூழலுக்கேற்ப அலை அலையாக ஓரிரு ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அமெரிக்க அனுபவம் சுட்டிக்காட்டுகிறது. நியூயார்க் மாநகரத்தில் இரண்டாம் அலை பன்றிக் காய்ச்சல் தொடங்கியிருப்பதாக மாநகர அதிகாரிகள் கருதுகின்றனர்.


தனி மனிதர்கள் மற்றும் குடும்பங்களைப் பொருத்தவரை, வெறுமனே பீதியடைவதும் வதந்திகளைப் பரப்புவதும், அன்றாடப் பணிகளைத் தவிர்த்துக்கொள்ள விளைவதும் நடைமுறை ரீதியான பலன் எதனையும் தரப்போவதில்லை.


தனிமனிதர்களும் குடும்பங்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். நோயின் இயல்பையும், அதன் தாக்கத்தின் தீவிரத்தையும் மக்கள் அறிவுபூர்வமாக விளங்கிக் கொள்ள முன்வருவதோடு, ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும்.


கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுவது நோயின் தாக்கத்தைப் பெருமளவு தணிக்க உதவும். வீடுகளைக் காற்றோட்டமும் வெளிச்சமும் புகக்கூடிய விதத்தில் வைத்துக் கொள்வது; சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வது; ஆரோக்கியமான உணவை உட்கொள்வது; நிறைய நீர் பருகுவது; காய்ச்சல் மற்றும் சளி ஏற்பட்டால் சளியைத் துடைக்கும் கைக்குட்டைகள் போன்றவற்றைத் தனியாக, கவனமாக அப்புறப்படுத்துவது; மூன்றடுக்குப் பாதுகாப்பு முகமூடியை நோயுற்றவரும், தேவைப்பட்டால் வீட்டிலுள்ள மற்றவர்களும் அணிந்து கொள்வது; கைகளை சோப் அல்லது ஆல்கஹால் கலந்த கலவையால் அடிக்கடி கழுவிக் கொள்வது; நோய்க்குறி உள்ளவர்களிடமிருந்து முடிந்தவரை விலகியிருந்து அவருக்குப் பணிவிடை செய்வது.


நோய்க்குறி உள்ளவர்கள் பன்றிக் காய்ச்சல் வந்தவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தாலோ அல்லது பன்றிக் காய்ச்சல் உள்ள பகுதிக்குச் சென்று வந்திருந்தாலோ அல்லது நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ள குறிப்பிட்ட வயது, நோய் அல்லது உடலியல்பு இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டவராக இருந்தாலோ கட்டாயமாக H1N1 வைரஸ் இருக்கிறதா என மருத்துவரின் ஆலோசனையோடு பரிசோதனை செய்து கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


“மக்கள் அதிகமாக கூடக்கூடிய மருத்துவமனை, பஸ் மற்றும் ரயில் நிலையங்களில் பணிபுரிவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோரில் யாருக்கேனும் நோய்க்குறிகள் இருந்தால் அவர்களும் பாதுகாப்பு முகமூடி அணிந்து கொள்ள வேண்டும்.


மற்றபடி வீதிகளில் வருவோர் போவோர் எல்லாம் முகமூடி அணிந்து கொள்வது பொதுவான அச்சத்தையும், குழப்பத்தையும் உண்டாக்குவதைத் தவிர வேறெந்தப் பலனையும் தராது”.


மற்றொன்று, பள்ளிக்கூடங்கள். பள்ளிக்கூடங்களை மூடுவது எந்தப் பிரச்னைக்கும் தீர்வு ஆகாது. அதுமட்டுமன்றி, காலவரையின்றி பள்ளிக்கூடங்களை மூடுவதும் நடைமுறை சாத்தியமில்லாதது. ஒருசில பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு தடையேதுமின்றி பள்ளிக்கூடங்களை நடத்தலாம். நோய்க்குறி உள்ளவர்கள் நோய் தீரும் வரை பள்ளிக்கூடத்துக்கு வரக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.


பள்ளியில் யாருக்கேனும் நோய்க்குறிகள் தோன்றினால் அவர்களுக்குப் பாதுகாப்பு முகமூடி அணிவித்து, தனித்த அறையில் தங்கச் செய்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். இதுகுறித்த தெளிவான வழிகாட்டுதலை அரசாங்கம் வழங்க வேண்டும்.


பன்றிக் காய்ச்சல் நோயைக் கண்டறிவதில் தாமதம் காட்டிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்போம் என்ற ரீதியிலான குறுகிய மேலோட்டமான அணுகுமுறை நோயின் தன்மைகளையும், பிரச்னையின் பரிமாணத்தையும் மத்திய அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது.


தமிழகத்தைப் பொருத்தவரை முதல்வர் தலைமையிலான பன்றிக் காய்ச்சல் குறித்த ஆய்வுக் கூட்டம் நல்ல தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை.


நோய் இருப்பதாகச் சந்தேகப்படுபவர்களை பரிசீலனை செய்வதற்கான மருத்துவ மையங்களையும், தரமான பரிசோதனைக் கூடங்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்போடு பரவலாக ஏற்பாடு செய்ய வேண்டும். ஏனெனில் ஓரிரு மையங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினால், அதுவே நோய் பரவுவதற்கு வழிவகை செய்ததாகிவிடும்.


பன்றிக் காய்ச்சல் நோயில் பாதிக்கப்பட்டவர்கள் என பரிசோதனை மூலம் நிரூபிக்கப்பட்டவர்களை தக்க முன்னேற்பாடுகளுடன் வீடுகளிலேயே சிகிச்சை செய்யவும், தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவர்கள் ஆகியோரை சிறப்பு மையங்களில் சேர்த்து சிகிச்சை செய்யத் தேவையான வழிகாட்டுதலையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தகுந்த ஏற்பாட்டையும் செய்ய வேண்டும்.


நோயின் தீவிரத்தை மட்டுப்படுத்த உதவுவதாகக் கருதப்படும் டாமிஃபுளூ வைரஸ் கொல்லி மருந்தை மாவட்ட அளவில் கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்வதோடு, அதைப் பயன்படுத்துவதற்கான சரியான வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும்.


பன்றிக் காய்ச்சல் கொள்ளை நோய் வைரஸôன புதியவகை H1N1 வைரஸுக்கு எதிராக தடுப்பூசி உருவாக்கும் முயற்சிக்கு இந்திய அரசாங்கம் தீவிரமான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.


கடைசியாக, எல்லா தரப்பினருக்கும் இத்தகைய கொள்ளை நோய்கள் எடுத்துவைக்கும் தெளிவான செய்தி ஒன்று உண்டு. ஒருவர் கழுத்தில் ஒருவர் மூச்சுவிட்டுக் கொண்டிருக்கும் போட்டி உலகில், பணம் மனிதனை வழிநடத்திச் செல்லும் பரபரப்பான வாழ்வில், வாசலில் மரணம் வந்து தட்டக்கூடும் என்ற உணர்வு, நின்று நிதானமாக தன் வாழ்வின் நோக்கையும், போக்கையும் மறு பரிசீலனை செய்ய மனிதனுக்கு தரப்பட்ட ஒரு வாய்ப்பு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.


நன்றி: தினமணி

H1N1 Flu (Swine Flu)

Also called: Swine flu
Swine flu is an infection caused by a virus. It's named for a virus that pigs can get. People do not normally get swine flu, but human infections can and do happen. The virus is contagious and can spread from human to human. Symptoms of swine flu in people are similar to the symptoms of regular human flu and include fever, cough, sore throat, body aches, headache, chills and fatigue.

There are antiviral medicines you can take to prevent or treat swine flu. There is no vaccine available right now to protect against swine flu. You can help prevent the spread of germs that cause respiratory illnesses like influenza by

Covering your nose and mouth with a tissue when you cough or sneeze. Throw the tissue in the trash after you use it.
Washing your hands often with soap and water, especially after you cough or sneeze. You can also use alcohol-based hand cleaners.
Avoiding touching your eyes, nose or mouth. Germs spread this way.
Trying to avoid close contact with sick people.
Staying home from work or school if you are sick

அச்சுறுத்துகிறது பன்றிக் காய்ச்சல்

ஏப் 28 (டிஎன்எஸ்) 'ஸ்வைன் ப்ளூ' என்னும் பன்றிக் காய்ச்சல் என்ற புதிய வகை நோய்க்கு மெக்சிகோவில் 149 பேர் பலியாகியுள்ளனர்.இந்நோய் பிற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருவதால் உலகளவில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, உலக நாடுகளை கடும் பீதிக்குள்ளாக்கிய பறவைக் காய்ச்சல் நோய் போன்று, தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் பரவி வருகிறது.இந்நோய், பன்றிகள் மூலமாக பரவுவதால் பன்றிக் காய்ச்சல் (ஸ்வைன் ப்ளூ) என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நோய்க்கு மெக்சிகோவில் இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர்.இது தற்போது இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் வேகமாக பரவிவருகிறது.

இது ஓர் தொற்றுநோய் என்பதால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் முகமூடி அணிந்தபடியே நடமாடுகிறார்கள்.

சுற்றுலாப் பயணிகள் மூலமாக, இந்நோய் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், பல நாடுகள் தங்களது நாட்டுக்கும் வரும் விமானப் பயணிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துக்கின்றன.

மேலும் பல நாடுகள், தங்கள் நாட்டினரை மெக்சிகோ செல்ல வேண்டாம் என்று எச்சரித்து வருகின்றன.

இந்நோயை தடுக்க உரிய மருந்துகள் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று கூறப்படுவதால், மகளிடையே பெரும் பீதி நிலவுகிறது.

பன்றிக் காய்ச்சல்:

பன்றி காய்ச்சல் சுவைன் புளூ என்ற வைரசால் பரவுகிறது. இது ஆர் தோமைசோ வெரிடேட் என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. சுவைன் புளூ வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை எச்-1, என்-1 என்று பட்டியலிட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழிப் பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.

வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.

தடுப்பூசி:

இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.

1968-ம் ஆண்டு ஹாங்காங்கில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

பறவைகள் மூலம்:

மெக்சிகேதவில் பன்றிகளுக்கு இது எப்படி பரவியது என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. ஆனாலும், ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் இந்த வைரஸ் வட அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும். அங்கு மெக்சிகேதவில் பன்றிகளில் புகுந்து உருமாறி மனிதனுக்குப் பரவியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

இந்த வைரசின் ஆர்என்ஏவை சோதனையிட்டதில் வட அமெரிக்க பன்றிகளில் காணப்படும் வைரசில் உள்ள சில ரசாயனங்களும், அதே நேரத்தில் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதிப் பெதருட்களும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் இந்த வைரஸ் ஐரோப்பாவிலிருந்து தான் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திருக்க வேண்டும் என்கிறார்கள்.

மனிதனுக்குள் நுழைந்துவிட்டால் அவர்களது உடலில் பல்கிப் பெருகி சுவாசம் மூலம் அடுத்தவருக்குப் பரவும் திறன் கொண்டது இந்த வைரஸ். இப்போது பரவிக் கொண்டிருக்கும் வைரசுக்கு H5N1 என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

இவ்வாறு மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் இந்த பன்றிசுக் காய்ச்சல் , பன்றியின் மாமிசத்தை உண்பதால் பரவாது என்கிறார்கள். காரணம், 75 டிகிரி அளவுக்கு மாமிசம் சூடாகும்போதே இந்த வைரஸ் அழிந்துவிடும்.

இந்த வைரஸ் தாக்கினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனிக்காமல் விட்டால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த amantadine, rimantadine, Tamiflu (oseltamivir) and Relenza (zanamivir) உள்பட சில மருந்துகள் உள்ளன. ஆனால், முன் கூட்டியே தடுக்கும் வாக்சீன்கள் இல்லை. இந்த மருத்துகளையும் மருத்துவர் ஆலோசனைப்படியே பயனபடுத்த வேண்டும்.

(இதில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது இந்த வைரஸ் amantadine and rimantadine ஆகியவற்றுக்குக் கட்டுப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது)

அதே நேரத்தில் கொஞ்சம் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பலாம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது, நோய் தாக்கப்பட்டவர்கள் இருந்தால் அங்கு நடமாடும்போது மூக்கையும் வாயையும் மூடும் பில்டர்களை அணிவது, கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுவது, நோய் தாக்குதல் உள்ள பகுதிகளுக்குப் போய்விட்டு வந்தால் வாய், கண், மூக்கில் கைகளை வைப்பதை தவிர்ப்பது, வீட்டில் குப்பை சேராமல் தவிர்ப்பது போன்றவை அதில் சில.

நோய் தாக்கப்பட்டவர் இருமல் வந்தால் துணியை வைத்து வாயை மூடிக் கொண்டு இருமினால் அடுத்தவருக்குப் பரவாது.

இந் நிலையில் இந்த வைரசுக்கு தடுப்பூசி (வாக்சீன்) கண்டுபிடிக்கும் பணியில் உலகின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இறங்கியுள்ளன. ஆனால், அதற்குள் நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் பெரிய சிக்கலை உலகம் எதிர்கொள்ளப் போவது நிச்சயம். (டிஎன்எஸ்

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்..


காய்ச்சலின் அறிகுறிகள்

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள்
உடல் சூடாதல் - சுரம் (100.o F க்கு மேல்), தலைவலி, தசைவலி,உடல் பலவீனம், தொண்டைப் புண், இருமல், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும்

எந்தத் தருணத்தில் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்?
பின்வரும் சிக்கல்கள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுக வேண்டும்: சிறுவர்/குழந்தைகளுக்கு:
வேகமான மூச்சு விடுதல், மூச்சு விடுதலில் சிரமம்
நீலம் அல்லது பழுப்பு நிறத்தோல்
தேவையான அளவு நீர் உட்கொள்ளாமை
நிற்காத, கடும் வாந்தி
தூங்கிக்கொண்டே இருத்தல், கலந்துரையாட விருப்பமின்மை


பன்றிக் காய்ச்சலைக் கண்டறிய உதவும் ஆய்வுகள்
மருந்து
பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு டமி ·ப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகள் அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் பரவி 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.
பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்களல் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மருந்து ஒருவருக்கு 5 முதல் 7 நாட்கள் வரை கொடுக்கலாம்.
டமி ஃப்ளு மாத்திரைகள் ஒரு வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கலாம்.
ரிலின்ஸா என்ற மாத்திரையை 7 வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இதனை தடுப்பு மருந்தாக 5 வயது ஆனவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம்.
இந்த மருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும். இந்த காய்ச்சலிருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு ஊசி இதுவரை எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கான முயற்சியில் பல நாட்டு மருந்து நிறுவனங்களும் இறங்கியுள்ளன. இதற்காக அவை பாதிக்கப்பட்டவர்களின் இரத்தங்களை கேட்டுள்ளனர். அதிலிருக்கும் தீ நுண்மத்தை ஆராய்ந்து விரைவில் மருந்து தயாரிக்க முடியும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன

பன்றிக் காய்ச்சல் தொற்றுபரவுதல்
2007 பிலிப்பைன்சில் தொற்றுபரவுதல்
1976 அமெரிக்காவில் தொற்றுபரவுதல்
2009 பன்றிக் காய்ச்சல் தொற்றுபரவுதல்

நோய் தடுப்பு முறை
நோய் தாக்கப்பட்ட நபர்களிடம் இருந்து விலகி இருப்பது அல்லது தவிர்க்க முடியாத காரணத்திற்காக அருகில் செல்லும் போது நுகர்மூடி அணிந்துகொள்வது மற்றும் வாழுமிடத்தை மிகத் தூய்மையாக வைத்துகொள்ளது நோய் பரவலை தற்போதைக்கு தடுக்கும் முறைகள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது

கொள்ளை நோய்
ஜீன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது


வரலாறு
பன்றிக்காய்ச்சலை உருவாக்கும் எச்1என்1 வகைத் தீநுண்மம், 1918இல் பரவிய, ஏறக்குறைய 50 மில்லியன் மனித உயிர்கள் இறப்பதற்குக் காரணமாயிருந்த, எசுப்பானிய ஃப்ளூ என்றழைக்கப்படும் உலகம்-தொற்றிய 1918 ஃப்ளூ கொள்ளை நோயின் பரம்பரையில் வரும் ஒரு வகைத் தீநுண்மமே ஆகும் ஆனால் தற்போது பரவி வரும் பன்றிக்காய்ச்சலை உருவாக்குவது ஒரு புதிய எச்1என்1 தீநுண்மம் ஆகும். இது இன்ஃப்ளுயென்சா ஏ வகைத் தீநுண்மத்தின் துணைப்பிரிவான எச்1என்1 வகையிலுள்ள நான்கு திரிபுறுக்களில் ஏற்பட்ட சடுதி மாற்றங்களால் தோன்றியது எனக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்
ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) என்னும் பெயர் கிரேக்க மூன்று மொழிச்சொற்களால் ஆனது. orthos = சரியான, சீரான ('standard, correct'), myxo = சளி ('mucus'), viridae தீநுண்மங்கள்
http://www.vetscite.org/publish/articles/000041/print.html
http://www.nature.com/news/2009/090427/full/news.2009.408.html
http://www.who.int/mediacentre/news/statements/2009/h1n1_20090427/en/index.html
http://www.nature.com/news/2009/090427/full/news.2009.405.html
http://www.nature.com/news/2009/090427/full/news.2009.405.html
"பன்றிக் காய்ச்சல்: மேலும் மூவர் பலி- சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்வு". தினமணி (11 Aug 2009). பார்க்கப்பட்ட நாள் 11 August 2009.
Centers for Disease Control and Prevention > Key Facts about Swine Influenza (Swine Flu) Retrieved on April 27, 2009
http://apps.uwhealth.org/health/hie/1/007421.htm
http://www.cdc.gov/swineflu/key_facts.htm
http://apps.uwhealth.org/health/hie/1/007421.htm
http://thatstamil.oneindia.in/news/2009/04/28/world-flu-spreads-along-north-america-149-dead.html
http://www.nature.com/news/2009/090427/full/news.2009.405.html
http://www.hindu.com/2009/08/11/stories/whoh1n1.pdf
http://www.who.int/mediacentre/news/statements/2009/h1n1_pandemic_phase6_20090611/en/index.html
http://www. cdc. gov/ncidod/eid/vol12no01/05-0979.htm 1918 இன்ஃப்ளுயென்சா: உலகம்-தொற்று கொள்ளை நோய்களின் தாய்
http://www. cdc. gov/ncidod/eid/vol12no01/05-0979.htm 1918 இன்ஃப்ளுயென்சா: உலகம்-தொற்று கொள்ளை நோய்களின் தாய்
http://en.wikipedia.org/wiki/2009_flu_pandemic#cite_ref-NYT6-23_86-0 ஆங்கில விக்கிப்பீடியா

பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல் என்பது ஆர்த்தோமிக்சோவிரிடே (Orthomyxoviridae) குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் வரும் ஒரு உயிரழிக்கும் நோயாகும். இந்நோய் இன்புலியன்சா A, இன்புலியன்சா B, மற்றும் இன்புலியன்சா C என்னும் மூன்று வகையான தீநுண்மத்தினால் ஏற்படுகிறது. இதில் இன்புலியன்சா A வினால் மிக அதிகமான அளவிலும், இன்புலியன்சா C னால் மிக அரிதாகவும் தொற்றுதல் ஏற்படுகிறது. இந்நோயை பரப்பும் தீ நுண்மம் மிகவும் அரிதான மரபு அணு தொகுதியை பெற்று இருப்பதால், இதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியப்படைந்துள்ளார்கள்


பன்றிக் காய்ச்சல் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு ஆர்த்தோமிக்சோவிரிடே குடும்பத்தை சேர்ந்த தீநுண்மத்தினால் பரவுகிறது
இந்நோய் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இந்நோய் பெரும்பாலும் பன்றிப் பண்ணைகளில் வேலை செய்பவர்களைத் தாக்குகிறது. ஒரு மனிதரை தாக்கியபின், மனிதரின் உடலுக்குள் இத்தீநுண்மம் மரபணு சடுதி மாற்றம் பெற்று பின் மனிதனிடம் இருந்து வேறு ஒரு மனிதனைத் தாக்குகிறது.மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் இருந்து இந்த நோய் ஐரோப்பாவிற்கும் பரவியுள்ளது. வட அமெரிக்கா முழுவதும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு மெக்சிகோ நாட்டில் முதலில் பன்றி காய்ச்சல் பரவி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த காய்ச்சல் காரணமாக மெக்சிகோவில் 1,614 பேர் அவதிப்பட்டு வருவதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு மெக்சிகோவில் இதுவரை இந்த காய்ச்சலுக்கு சுமார் 149 பேர் பலியாகி இருக்கின்றனர். அமெரிக்காவில் 20 பேரும், கனடாவில் 6 பேரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சந்தேகத்திற்கு உரிய நோய் பரவல் பிரேசில், இசுரேல், ஆசுத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இருப்பதாக கருதப்படுகிறது. 74 நாடுகளில் இந்நோயினால் 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவிலும் இந்நோய் பரவி வருகிறது. இதுவரை (11 ஆகஸ்ட்,2009) நாடு முழுவதும் 959 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

மகாராட்டிர மாநிலம், புணே நகரம் பன்றிக் காய்ச்சலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் தாணே மாவட்டம், தமிழ்நாடு, தில்லி, கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் பன்றிக் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றி காய்ச்சல் சிகிச்சைக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை: உலக சுகாதார நிறுவனம்

பன்றி காய்ச்சல் சிகிச்சை குறித்து உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது :

பன்றி காய்ச்சல் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஒசல்டமிவிர்', 'ஜானமிவிர்' ஆகிய மருந்துகளை அளிக்க வேண்டும். ஒசல்டமிவிர் கிடைக்காவிட்டால், ஜானமிவிர் மருந்தை கொடுக்கலாம்.

இந்த மருந்துகள் மரணத்தை ஏற்படுத்தும் நிமோனியாவை கட்டுப்படுத்துகிறது.

பன்றி காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்படாத நபர்களுக்கு இந்த வைரஸ் தடுப்பு மருந்துகளை அளிக்கக்கூடாது. 5 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளுக்கு கூட, அவர்கள் கடுமையாக பாதிக்கப்படாத நிலையில் இந்த மருந்துகளை கொடுக்க வேண்டிய தேவை இல்லை.

மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, 3 நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் போன்ற பன்றி காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

குழந்தைகள் வேகமாகவோ, சிரமப்பட்டோ மூச்சு விடுதல், சுறுசுறுப்பு இல்லாமை, படுக்கையை விட்டு எழுவதில் சிரமம், விளையாடுவதில் ஆர்வம் இன்மை ஆகியவற்றுடன் காணப்பட்டுவதும் பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகளாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பன்றி காய்ச்சல் பரவுவது எப்படி?

பன்றி காய்ச்சல் “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது. இது “ஆர் தோமைசோ வெரிடேட்” என்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே 5 வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.

இந்த வைரஸ் பன்றி மற்றும் கோழிகளில் பரவி இருக்கும். எனவே பன்றி, கோழி பண்ணைகளில் பணியாற்றுபவர்களுக்கு விலங்குகளில் இருந்து பரவி வருகிறது.

வைரஸ் உடலில் பரவியதும் சளி பிடிக்கும். உடனே காய்ச்சல் வரும், தொண்டை வலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை போன்றவை வரும். முதல் 5 நாட்களுக்கு சாதாரண காய்ச்சல் போல இருக்கும். பின்னர் காய்ச்சல் கடுமையாகும். தாங்க முடியாத உடல்வலி, வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும்.

இந்த நோய் ஏற்பட்டு இருப்பதை சாதாரண முறை சோதனைகளால் கண்டு பிடிக்க முடியாது. பல்வேறு கட்ட சோதனை நடத்தினால்தான் தெரியவரும்.

நோய் தாக்கியவரிடம் இருந்து வைரஸ் மற்றவர்களுக்கும் வேகமாக பரவும். சளி மூலம் அதிக அளவில் பரவும். நோய் தாக்கியவர் உமிழ் நீர், சளியை தொட்டு விட்டு கை கழுவாமல் மற்றவரை தொட்டால் அதன் மூலமும் பரவி விடும். எனவே நோய் தாக்கியவரை தனிமை படுத்தினால்தான் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.

பன்றி காய்ச்சல் நோய் முதன் முதலில் பரவியது 1918-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 1976-ல் அமெரிக்க படைவீரர்களை நோய் தாக்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்சில் பரவியது.

இந்த நோயை தடுக்க தடுப்பூசி உள்ளது. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை கொடுத்தாலும் குணமாகும். முதலிலேயே கண்டு பிடித்து சிகிச்சை அளித்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படாது. வேறு நோய் என்று கருதி அலட்சியப்படுத்தினாலும் நோயை முற்றவிட்டாலும் ஆபத்து ஏற்படும்.

பன்றி காய்ச்சல் முதன் முதலில் 1918-ம் ஆண்டு ஸ்பெயினில் பரவியது. பின்னர் உலகம் முழுவதும் பரவி 10 கோடி பேர் பலியானார்கள்.

1968-ம் ஆண்டு ஹாங்காங்ஙகில் பரவி உலகம் முழுவதும் தொற்றியது. இதில் 10 லட்சம் பேர் பலியானார்கள்.

நோய் அறிகுறிகள்

* இடைவிடாத காய்ச்சல்

* மூக்கில் நீர்வடிதல்

* தொண்டையில் வலி

* வயிற்று போக்கு

* மயக்கம்

* பசியின்மை

* சளி தொல்லை

* சாப்பாடு மீது வெறுப்பு

* வாந்தி எடுத்தல்

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க‌ சில யோசனைகள்

பன்றி காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது பற்றிய சில யோசனைகளை பொது ம‌க்களு‌க்கு மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அதனை ‌பி‌ன்ப‌ற்‌றி ப‌ன்‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல் பரவுவதை தடு‌ப்போ‌ம்.

சுகாதாரமாக வாழு‌ங்க‌ள்

தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.

வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள்...

இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.

ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 8 முதல் 10 தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு தானிய வகைகள், பசுமையான காய்கறிகள், வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்கள் சாப்பிடுங்கள்.

மது அருந்த வே‌ண்டா‌ம்
மது அருந்தினால் உடலில் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி குறையு‌ம். இதனா‌ல் பன்றி காய்ச்சல் போ‌ன்ற நோய்க்கிருமிக‌ள் உடலு‌க்கு‌ள் எ‌ளிதாக ஊடுருவு‌ம் எ‌ன்பதா‌ல் மது அருந்துவதை தவிர்த்து விடுங்கள்.

மிதமான உடற்பயிற்சி உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் என்பதால், தினசரி 30 முதல் 40 நிமிடம் வேகமான நடை‌ப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருங்கள்.

இருமுவதன் மூலமும், தும்முவதன் மூலமும் பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்பதால், நோய் பாதிப்பு உள்ளவர்

பன்றிக் காய்ச்சல் : அவசர அழைப்புக்கு

பன்றிக் காய்ச்சல் நோய் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு பேர் பன்றிக் காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த மாணவன் சஞ்சய் பன்றிகாய்ச்சல் நோய் பாதித்து மரணமடைந்ததைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

மேலும், பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் இருப்பவர்கள், பன்றிக் காய்ச்சல் பற்றி தகவல் தெரிந்து கொள்ள விரும்பினால் 1913 என்ற மாநகராட்சி எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மருத்துவக் குழு அனுப்பி வைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அவசர அழைப்பு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அகில இந்தியா முழுவதும் இலவச அழைப்புக்கு

1075 அல்லது 1800, 1811, 4377

மாநில வாரியாக

டெல்லி - ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை - 011 - 24525211, 23404328, 23365525.

தீன் தயால் மருத்துவமனை - 011 - 2512 5259

சென்னை - தொற்றுநோய் மருத்துவமனை - 044 - 25912686.

கோயம்பத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - 09442012555.

கொல்கட்டா - தொற்றுநோய் மருத்துவமனை - 09433392182, 09434009077

ஹைதராபாத் - ஏவி நெஞ்சக நோய் மருத்துவமனை - 040 - 23814939

மும்பை - கஸ்தூரிபா மருத்துவமனை - 022 - 23083901, 23083902, 23083903, 23082904.

புனே - டாக்டர் நாயுடு தொற்றுநோய் மருத்துவமனை - 09923130909

பெங்களூர் - ராஜீவ் காந்தி நெஞ்சக நோய் மையம் - 91-80-26632634

லேக்சைட் மருத்துவமனை - 80 - 5360823
ருந்துகள் அனைத்தும் மருத்துவர்களால் மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டும்.

பன்றிக் காய்ச்சல் ‌விவர‌ங்க‌ள்

சாதாரண காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எப்படி வித்தியாசத்தை உணர்வது என்று பலருக்கும் குழப்பம்.

சாதாரண காய்ச்சலைப் போன்றே அனைத்து விஷயங்களும் பன்றிக் காய்ச்சலுக்கும் இருக்கும். காய்ச்சல் வந்ததும் உடல் சோர்வு, சளி பிடிப்பது என பன்றிக் காய்ச்சலுக்கும் அப்படித்தான் இருக்கும்.

பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள் பலருக்கு மூக்கு ஒழுகுதல், கழுத்தில் நெறி கட்டுதல், வாந்தி, பேதி போன்றவை ஏற்பட்டுள்ளது. இந்த அறிகுறிகளில் இரண்டுக்கு மேற்பட்டவையாக இருந்தால் அது பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாக இருக்கலாம்.

சளி பிடித்தால் ஏற்படும் பிரச்சினைகள், பன்றிக் காய்ச்சலில் விரைவாக ஏற்படும். பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்கள் மிகவும் சோர்வாக உணர்வார்கள். சுமார் 2, 3 வாரங்கள் காய்ச்சல் அடித்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி உணர்வார்கள்.

தசை வலி ஏற்படும். அவ்வப்போது உடல் சூடு அதிகமாகும், சில சமயம் குறையும்.

ஆனால் இந்த அறிகுறிகளை வைத்தே ஒருவருக்கு பன்றிக் காய்ச்சல் பரவி இருக்கும் என்பதை உறுதிபடுத்த முடியாது.

மருத்துவமனைக்குச் சென்று முழுப் பரிசோதனை செய்த பின்னரே பன்றிக் காய்ச்சல் உறுதிப்படுத்தப்படும். ஒவ்வொரு மாநில சுகாதாரத் துறையும் இந்த பரிசோதனைகளை செய்து வருகின்றன.

உடனடியாக செய்ய வேண்டியது என்ன

நீங்கள் கடந்த 10 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலோ, பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டாலோ உடனடியாக அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரை சந்தியுங்கள்.

மருத்துவம் என்ன

பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியவர்களுக்கு டமி ·ப்ளூ மற்றும் ரிலின்ஸா என்ற மருந்துகள் அளிக்கப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் பரவி 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.

பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் தென்பட்டவுடனேயே இந்த மருந்துகளை எடுத்துக் கொண்டால் ஒன்று அல்லது இரண்டு நாட்களல் மருந்தின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். இந்த மருந்து ஒருவருக்கு 5 முதல் 7 நாட்கள் வரை கொடுக்கலாம்.

டமி ஃப்ளு மாத்திரைகள் ஒரு வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கலாம்.

ரிலின்ஸா என்ற மாத்திரையை 7 வயது ஆனவர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம். இதனை தடுப்பு மருந்தாக 5 வயது ஆனவர்கள் மற்றும் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்கலாம்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளால் பரவியதா ஸ்வைன் வைரஸ்?

மானுட-இயற்கை உறவு நிலை சங்கிலித் தொடரில் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு நெருக்கடி காலக்கட்டமாக அடையாளப்படுத்த முடியும் என்றால் தற்போதைய கொள்ளை நோய் காலக்கட்டத்தை உயிர்ப் பயங்கரவாத நெருக்கடி காலக் கட்டம் என்றே வர்ணிக்க வேண்டும்.

டெங்கு, பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா, சார்ஸ் தற்போது பன்றிக் காய்ச்சல். இவையனைத்தையும் நாம் ஏதோ இயற்கையாகவே பரவிய கொள்ளை நோய் என்று நம்புகிறோம், மாறாக மரபணு விஞ்ஞான ஆராய்ச்சியால் ஏற்பட்ட உயிர்ப் பயங்கரவாதம் என்று ஏன் அழைக்கக் கூடாது? என்ற கேள்வி இதன் தோற்றம் குறித்து ஆராயும்போது இயல்பாகவே எழுகிறது.

மரபணு மாற்ற ஆய்வுகள் பல்கிப் பெருகி அது ஓரிரு இடங்களில் வெற்றிகரமான ‘விளைவு’களை ஏற்படுத்தியது போல் விஞ்ஞான சமூகம் காட்டி வந்ததென்றால், அதன் எதிர்விளைவுகள் படு பயங்கரமாக மாறி வருவதை இன்றைய காலகட்டங்களில் நாம் பார்க்கிறோம்.

காய்ச்சல் என்பது நோயல்ல, உள்ளிருக்கும் நோயை தெரிவிக்கும் ஒரு அறிகுறி என்ற காலம் போக இன்று காய்ச்சலே விதம் விதமாக பெரும் நோய்களாக, கொள்ளை நோய்களாக பரவி வருகிறது!

எதன் மரபணுவை வேண்டுமானாலும் எதனுள்ளும் செலுத்தி அதனை வேறு ஒன்றாக மாற்றி அதன் வணிக பலன்களை அதிகரிக்கச் செய்வதே மரபனு ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கமாக இருந்து வருகிறது.

அதே போல் பன்றிகளின் மரபணுவை மாற்றுவது போன்ற ஆராய்ச்சிகளால் சுமார் 40 அல்லது 50 ஆண்டுக் காலம் கழித்து இன்று அது பன்றிக் காய்ச்சல் என்ற உயிர்க் கொல்லி நோயாக மாற்றமடைந்துள்ளதா என்பது ஆய்வுக்குறியது என்றாலும், இது போன்ற சாத்தியக் கூறுகளை திட்டவட்டமாக மறுப்பதற்கில்லை.

1977ஆம் ஆண்டிற்கு பிறகே இன்ஃபுளுயென்ஸா வைரஸ் என்று அழைக்கப்படும் எச்1 என்1 மற்றும் எச்3 என்2 வைரஸ்கள் மனிதர்களிடத்தில் மூச்சுக்குழல், நுரையீரல் சம்பந்தமான நோய்களை தோற்றுவிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1977ஆம் ஆண்டிற்கு முன்பு ஃப்ளூ காய்ச்சல் சீசனில் ஒரே ஒரு வைரஸ்தான் மனித உடலில் காணப்பட்டது.

இன்று உலகை உலுக்கி வரும் ஒரு கொடிய வைரஸாக இது உருமாறியது எவ்வாறு என்பது பல சிக்கலான சந்தேகங்களை எழுப்புகிறது.

இன்ஃப்ளூயென்ஸா வைரஸின் மேற்பரப்பில் உள்ள 'கிளைக்கோ புரோட்டீன்கள்' என்பதில் நடந்துள்ள மிக முக்கியமான சில மாற்றங்கள் (Antigenic shifts என்று அழைக்கப்படுகிறது) இன்று உலகெங்கிலும் கொள்ளை நோயாக, கொடிய உயிர்க் கொல்லி நோயாக இதனை மாற்றியிருக்கிறது.

1889 முதல் இது போன்ற ஆன்ட்டி ஜெனிக் மாற்றங்கள் 6 முறை நடந்துள்ளது. 1889-இல் எச்2 என் 2, 1900ஆம் ஆண்டு எச்3 என்8, 1918-இல் எச்1 என்1, 1957-இல் எச்2 என்2, 1968 இல் எச்3 என்2. பிறகு 1977 -இல் மீ்ண்டும் எச் 1 என் 1.

இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு மனித உடலில் காணப்படாதது. இதனால் இதனை எதிர்க்கும் சக்தி குறைவு அல்லது இல்லவே இல்லை என்று கூறலாம்.

உலகின் வடக்கு பகுதி முழுதும் 1977- 78-இல் இந்த எச்1 என்1 வைரஸ் கொள்ளை நோயாக பரவியது. இந்த வைரஸில் உள்ள HA NA புரோட்டீன்களை சோதனை செய்தபோது அது 1950ஆம் ஆண்டு இருந்த வைரஸ் போலவே இருந்தது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

இந்த முடிச்சை அவிழ்க்க முயன்ற விஞ்ஞானிகள், 1950ஆம் ஆண்டின் எச் 1 என் 1 வைரஸ், பரிசோதனை நிலைய ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். 1977ஆம் ஆண்டு இது ஒரு விபத்தாகவோ அல்லது வேண்டுமென்றோ வெளியில் பரப்பப் பட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இந்த சாத்தியக் கூறுகளை சீன, ரஷ்ய விஞ்ஞானிகள் மறுத்தாலும், விஞ்ஞானப்பூர்வமாக இன்றும் இந்த சாத்தியக்கூறுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த முறை உலகம் முழுதும் தாக்கி வரும் இந்த எச்1 என்1 வைரஸின் விசேஷம் என்னவெனில் இந்த வைரஸில் வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, பன்றிகளின் மரபணு இருப்பதோடு, பறவைகள் மரபணுவும், மனித மரபணுவும் இருக்கிறது என்ற அதிசயத்தை நோய்க் கட்டுப்பாட்டு மைய ஆய்வுகள் தெரிவித்திருப்பதே!

மரபணு பொறியியல் ஆய்வுகளின் விளைவாக இந்த கொடிய வைரஸ் உருவாகியிருக்கலாம் என்று ஆஸ்ட்ரேலிய மருத்துவ விஞ்ஞானியும் 75-வயது நிரம்பியவருமான அட்ரியன் கிப்ஸ் என்பவர் எழுப்பிய ஐயம் டெக் ஹெரால்ட் என்ற பத்திரிக்கையில் மே மாதம் வெளியானது.

இவர் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கு கொடுக்கப்படும் டாமிஃ ப்ளூ என்ற மருந்தை கண்டுபிடித்த குழுவில் இருந்தவர் என்பது மிக முக்கியமானது. வைரஸை ஒழிப்பதாக கூறிக் கொண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் நடைமுறைகளின் விளைவாய் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார் கிப்ஸ்.

புளூம்பர்க் தொலைக்காட்சி நேர்காணலில் இவர் இந்த வைரஸ் பரிசோதனைக் கூடம் அல்லது ஆய்வு மையங்களிலிருந்து வெளியில் பரவியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

My Gallery