Custom Search

அழகிய படங்களுடன் கூடிய கவிதைகளை E-மைலில் பெற E-மெயில் முகவரியை பதிவு செய்க:

Delivered by DNIA

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றிகளால் பரவியதா ஸ்வைன் வைரஸ்?

மானுட-இயற்கை உறவு நிலை சங்கிலித் தொடரில் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு நெருக்கடி காலக்கட்டமாக அடையாளப்படுத்த முடியும் என்றால் தற்போதைய கொள்ளை நோய் காலக்கட்டத்தை உயிர்ப் பயங்கரவாத நெருக்கடி காலக் கட்டம் என்றே வர்ணிக்க வேண்டும்.

டெங்கு, பறவைக் காய்ச்சல், சிக்குன் குனியா, சார்ஸ் தற்போது பன்றிக் காய்ச்சல். இவையனைத்தையும் நாம் ஏதோ இயற்கையாகவே பரவிய கொள்ளை நோய் என்று நம்புகிறோம், மாறாக மரபணு விஞ்ஞான ஆராய்ச்சியால் ஏற்பட்ட உயிர்ப் பயங்கரவாதம் என்று ஏன் அழைக்கக் கூடாது? என்ற கேள்வி இதன் தோற்றம் குறித்து ஆராயும்போது இயல்பாகவே எழுகிறது.

மரபணு மாற்ற ஆய்வுகள் பல்கிப் பெருகி அது ஓரிரு இடங்களில் வெற்றிகரமான ‘விளைவு’களை ஏற்படுத்தியது போல் விஞ்ஞான சமூகம் காட்டி வந்ததென்றால், அதன் எதிர்விளைவுகள் படு பயங்கரமாக மாறி வருவதை இன்றைய காலகட்டங்களில் நாம் பார்க்கிறோம்.

காய்ச்சல் என்பது நோயல்ல, உள்ளிருக்கும் நோயை தெரிவிக்கும் ஒரு அறிகுறி என்ற காலம் போக இன்று காய்ச்சலே விதம் விதமாக பெரும் நோய்களாக, கொள்ளை நோய்களாக பரவி வருகிறது!

எதன் மரபணுவை வேண்டுமானாலும் எதனுள்ளும் செலுத்தி அதனை வேறு ஒன்றாக மாற்றி அதன் வணிக பலன்களை அதிகரிக்கச் செய்வதே மரபனு ஆராய்ச்சியின் அடிப்படை நோக்கமாக இருந்து வருகிறது.

அதே போல் பன்றிகளின் மரபணுவை மாற்றுவது போன்ற ஆராய்ச்சிகளால் சுமார் 40 அல்லது 50 ஆண்டுக் காலம் கழித்து இன்று அது பன்றிக் காய்ச்சல் என்ற உயிர்க் கொல்லி நோயாக மாற்றமடைந்துள்ளதா என்பது ஆய்வுக்குறியது என்றாலும், இது போன்ற சாத்தியக் கூறுகளை திட்டவட்டமாக மறுப்பதற்கில்லை.

1977ஆம் ஆண்டிற்கு பிறகே இன்ஃபுளுயென்ஸா வைரஸ் என்று அழைக்கப்படும் எச்1 என்1 மற்றும் எச்3 என்2 வைரஸ்கள் மனிதர்களிடத்தில் மூச்சுக்குழல், நுரையீரல் சம்பந்தமான நோய்களை தோற்றுவிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1977ஆம் ஆண்டிற்கு முன்பு ஃப்ளூ காய்ச்சல் சீசனில் ஒரே ஒரு வைரஸ்தான் மனித உடலில் காணப்பட்டது.

இன்று உலகை உலுக்கி வரும் ஒரு கொடிய வைரஸாக இது உருமாறியது எவ்வாறு என்பது பல சிக்கலான சந்தேகங்களை எழுப்புகிறது.

இன்ஃப்ளூயென்ஸா வைரஸின் மேற்பரப்பில் உள்ள 'கிளைக்கோ புரோட்டீன்கள்' என்பதில் நடந்துள்ள மிக முக்கியமான சில மாற்றங்கள் (Antigenic shifts என்று அழைக்கப்படுகிறது) இன்று உலகெங்கிலும் கொள்ளை நோயாக, கொடிய உயிர்க் கொல்லி நோயாக இதனை மாற்றியிருக்கிறது.

1889 முதல் இது போன்ற ஆன்ட்டி ஜெனிக் மாற்றங்கள் 6 முறை நடந்துள்ளது. 1889-இல் எச்2 என் 2, 1900ஆம் ஆண்டு எச்3 என்8, 1918-இல் எச்1 என்1, 1957-இல் எச்2 என்2, 1968 இல் எச்3 என்2. பிறகு 1977 -இல் மீ்ண்டும் எச் 1 என் 1.

இவை அனைத்தும் பல ஆண்டுகளுக்கு மனித உடலில் காணப்படாதது. இதனால் இதனை எதிர்க்கும் சக்தி குறைவு அல்லது இல்லவே இல்லை என்று கூறலாம்.

உலகின் வடக்கு பகுதி முழுதும் 1977- 78-இல் இந்த எச்1 என்1 வைரஸ் கொள்ளை நோயாக பரவியது. இந்த வைரஸில் உள்ள HA NA புரோட்டீன்களை சோதனை செய்தபோது அது 1950ஆம் ஆண்டு இருந்த வைரஸ் போலவே இருந்தது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

இந்த முடிச்சை அவிழ்க்க முயன்ற விஞ்ஞானிகள், 1950ஆம் ஆண்டின் எச் 1 என் 1 வைரஸ், பரிசோதனை நிலைய ஃப்ரீசரில் பாதுகாக்கப்பட்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றனர். 1977ஆம் ஆண்டு இது ஒரு விபத்தாகவோ அல்லது வேண்டுமென்றோ வெளியில் பரப்பப் பட்டது என்ற முடிவுக்கு வந்தனர். இந்த சாத்தியக் கூறுகளை சீன, ரஷ்ய விஞ்ஞானிகள் மறுத்தாலும், விஞ்ஞானப்பூர்வமாக இன்றும் இந்த சாத்தியக்கூறுதான் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் இந்த முறை உலகம் முழுதும் தாக்கி வரும் இந்த எச்1 என்1 வைரஸின் விசேஷம் என்னவெனில் இந்த வைரஸில் வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய, பன்றிகளின் மரபணு இருப்பதோடு, பறவைகள் மரபணுவும், மனித மரபணுவும் இருக்கிறது என்ற அதிசயத்தை நோய்க் கட்டுப்பாட்டு மைய ஆய்வுகள் தெரிவித்திருப்பதே!

மரபணு பொறியியல் ஆய்வுகளின் விளைவாக இந்த கொடிய வைரஸ் உருவாகியிருக்கலாம் என்று ஆஸ்ட்ரேலிய மருத்துவ விஞ்ஞானியும் 75-வயது நிரம்பியவருமான அட்ரியன் கிப்ஸ் என்பவர் எழுப்பிய ஐயம் டெக் ஹெரால்ட் என்ற பத்திரிக்கையில் மே மாதம் வெளியானது.

இவர் பன்றிக் காய்ச்சல் சிகிச்சைக்கு கொடுக்கப்படும் டாமிஃ ப்ளூ என்ற மருந்தை கண்டுபிடித்த குழுவில் இருந்தவர் என்பது மிக முக்கியமானது. வைரஸை ஒழிப்பதாக கூறிக் கொண்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் நடைமுறைகளின் விளைவாய் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார் கிப்ஸ்.

புளூம்பர்க் தொலைக்காட்சி நேர்காணலில் இவர் இந்த வைரஸ் பரிசோதனைக் கூடம் அல்லது ஆய்வு மையங்களிலிருந்து வெளியில் பரவியிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

My Gallery